"இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்"
என்ற இந்த பாட்டு
கண்ணதாசன் இயற்றி ,
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்து,
ஜானகியும் P.B.ஸ்ரீனிவாசும் பாடி ,
விஜயகுமாரியும் முத்துராமனும் வாயசைத்து நடித்து
1962 ல் வெளிவந்த
போலீஸ்காரன் மகள்
திரைப்படத்தில் உள்ளது. பொதுவாக 100க்கு 99 சதவீத திரைப்படப்பாடல்கள் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பாடினால் அது
காதலன்-காதலி
அல்லது
கணவன்- மனைவி
என்று தான் இருக்கும்.
ஆனால் இந்த பாடல்
அண்ணன்-தங்கை
பாடுவதாக அமைந்துள்ளது .
கணவன்- மனைவி
என்று தான் இருக்கும்.
ஆனால் இந்த பாடல்
அண்ணன்-தங்கை
பாடுவதாக அமைந்துள்ளது .
அண்ணன்-முத்துராமன்
தங்கை-விஜயகுமாரி
திரைப்படத்தைப்பார்க்காமல் பாடலை மட்டும் கேட்டோமானால் தங் கை
"நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ"
என்று பாடி முடித்தவுடன் அண்ணன்
"இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா"
என்று தொடர்ந்து பாடஆரம்பித்து பிறகு இசைக்கோர்வை தொடர அதன் பின்
"தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ"
என்று பாடுவதாக முடியும். அண்ணன் தான் பாடுகிறான் என்று அவளுக்கு ஆரம்பத்தில் தெரியாது. தன் காதலன் பாலாஜி தான் பாடுவதாக நினைத்து தேடி வருவாள் ஆனால் அவள் அண்ணனை பார்த்தவுடன் வெட்கத்துடன் ஓடி ஒளிவாள்.இது வீடியோ காட்சியில் தெரியும்.
ஆனால் நாம் பாடலை மட்டும் கேட்டால்
ஆனால் நாம் பாடலை மட்டும் கேட்டால்
"இந்த அண்ணனை மறந்து விட்டாள்"
என்ற வார்த்தைகள் வரும் வரை நமக்கும் யார் பாடுகிறார்கள் என்பது தெரியாது. இயக்குநர் ஸ்ரீதரால் இந்த பாடல் படமாக்கப்பட்டவிதம் மிகவும் அருமை. நீங்களும் ஒரு முறை கண்டு ரசியுங்கள்.
இதோ அந்த அருமையான பாடலின் வரிகள்:
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே என் தெய்வத்தை காண்பாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
வண்ண மலர்களின் அரும்பாவாள்
உன் மனதுக்குள் கரும்பாவாள்
இன்று அலைகடல் துரும்பானாள்
என்று ஒரு மொழி கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
நடு இரவினில் விழிக்கின்றாள்
உன் உறவினை நினைக்கின்றாள்
அவள் விடிந்தபின் துயில்கின்றாள்
என்னும் வேதனை கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
தன் கண்ணனை தேடுகிறாள்
மன காதலை கூறுகிறாள்
இந்த அண்ணனை மறந்துவிட்டாள்
என் அதனையும் கூறாயோ
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
என் கண்ணுக்கு கண்ணாகும் இவள் சொன்னது சரிதானா
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்
------------------------------ ------------------------------ -----------
இதோ அந்த பாடலின் வீடியோ:
அன்புடன்
ஜெ.சந்தானகிருஷ்ணன்
4.10.2018
No comments:
Post a Comment