Thursday, June 15, 2017

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?"
என்ற ராமச்சந்திர கவிராயரின் பாடலை மனதில் கொண்டு நமது கவிஞர் கண்ணதாசன் 1963ம் வருடம் பாவ மன்னிப்பு படத்திற்கு எழுதிய  
"அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான் எப்படிச்சொல்வேனடி" 

என்ற பாடல் என்று கேட்டாலும் செவிக்கு இனிமையாக இருக்கும். கீழே அந்த பாடலை அது பிறந்த விதத்தை திரு.MSV அவர்களே  விவரிப்பதைக் கேட்கும் பொழுது அந்த காலத்தில் எவ்வளவு சிரத்தையுடன் திரையில் பணியாற்றி இருக்கிறார்களென்று ஆச்சரியப்பட வைக்கிறது. 


இப்படிக்கு 
சந்தானகிருஷ்ணன் 
(JS)