காத்திருந்த கண்கள் படத்தில் உள்ள காற்று வந்தால் தலை சாயும் …நாணல் என்ற பாடலில் ஒவ்வொரு வரியின் கடைசி வார்த்தையும்
"நேர் நிரை அல்லது நிரை நிரை"
என்ற ஈரசைச்சீர்களுடன் அமைந்துள்ளது. கண்ணதாசன் கவிதையின் அழகை இதில் ரசிக்கவும் .
இதோ அந்த பாடல்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
ஆற்றினிலே கரைபுரளும்...வெள்ளம்
ஆசையிலே கரை புரளும் …உள்ளம்
ஆடை தொட்டு விளையாடும் …தென்றல்
ஆசை தொட்டு விளையாடும் …கண்கள்
ஒருவர் மட்டும் படிப்பதுதான் …வேதம்
இருவராக படிக்க சொல்லும் …காதல்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
மழை வரும் முன் வானை மூடும் …மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்…மோகம்
மழை வரும் முன் வானை மூடும்…மேகம்
திருமணத்துக்கு முன் மனதை மூடும்…மோகம்
ஓடி வரும் நாடி வரும்
உறவு கொண்ட தேதி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்…மானம்
பாடி வரும் பருவ முகம்
பக்கம் வந்து நின்ற முகம்
பாசத்தோடு சேர்ந்துகொள்வேன்… நானும்
நானும்
நானும்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் …அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் …கன்னம்
அஞ்சி அஞ்சி நடந்து வரும் …அன்னம்
அச்சத்திலே சிவந்து விடும் …கன்னம்
பொங்கிவரும் வஞ்சி முகம் கோபுரத்து கலசமென
அந்தி வெயில் நேரத்திலே …மின்னும்
மின்னி வரும் நேரத்திலே மேனி கொண்ட பருவத்திலே
பெண்ணிருந்தால் தோற்று விடும் …பொன்னும்
உள்ளம்
துள்ளும்
காற்று வந்தால் தலை சாயும் …நாணல்
காதல் வந்தால் தலை சாயும் …நாணம்
அன்புடன்
ஜெ.சந்தானகிருஷ்ணன்
21.11.2018