Friday, March 26, 2021

 இன்று நான் சொல்லப்போவது என் அண்ணன்  படத்தில் வரும்  "நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா பாடல். 

இந்த பாடலில் மூன்றாம் சரணத்தில் உள்ள கடைசி வரியை  "வெற்றி உன்னைத்  தேடி வரும்  வாளை  நிறுத்து " என்று கண்ணதாசன் எழுதியிருந்தார்.  அது அப்படியே படமாக்கப்பட்டது .ஆனால் சென்சாரில்  அதை  மாற்றச்சொன்னதால்  "நீதி உன்னைத் தேடி வரும் மாலை தொடுத்து" என்று  கண்ணதாசன் மாற்றி எழுதிக் கொடுத்தார். இதில் முக்கியமானது என்னவென்றால்  படம் முடிந்த பிறகு பாட்டில் மட்டும் தான் மாற்ற முடிந்தது. உதட்டசைவு  "வெற்றி உன்னைத்  தேடி வரும்  வாளை  நிறுத்து " என்று தான் காட்டும் . கீழே கொடுத்துள்ள Link ஐ  சொடுக்கி பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளவும் .

 LINK: https://www.youtube.com/watch?v=7bYkrfGignQ



பாடல் வரிகள் 
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு?
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு?
கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு?
நீ கொண்டு வந்தது என்னடா?, மீசை முறுக்கு

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
 இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து
அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து.

நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு, ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா .