Thursday, June 15, 2017

"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் ரட்சித்தானா?"
என்ற ராமச்சந்திர கவிராயரின் பாடலை மனதில் கொண்டு நமது கவிஞர் கண்ணதாசன் 1963ம் வருடம் பாவ மன்னிப்பு படத்திற்கு எழுதிய  
"அத்தான் என் அத்தான் அவர் என்னைத்தான் எப்படிச்சொல்வேனடி" 

என்ற பாடல் என்று கேட்டாலும் செவிக்கு இனிமையாக இருக்கும். கீழே அந்த பாடலை அது பிறந்த விதத்தை திரு.MSV அவர்களே  விவரிப்பதைக் கேட்கும் பொழுது அந்த காலத்தில் எவ்வளவு சிரத்தையுடன் திரையில் பணியாற்றி இருக்கிறார்களென்று ஆச்சரியப்பட வைக்கிறது. 


இப்படிக்கு 
சந்தானகிருஷ்ணன் 
(JS)

   

Monday, February 27, 2017

​தரிசனம் என்ற படத்தில் TMS ம் , L.R.ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய ஓரூ டூயட்.  கண்ணதாசன் எழுதி சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைத்தது. இது ஒரு வித்தியாசமான பாடல். ஏனென்றால் பொதுவாக ஒரு ஆண் தான் பெண்ணை காதல்  விளையாட்டுக்கு அழைப்பான். பெண் ஒதுங்கிப்போவாள். ஆனால் இந்த பாடலில் பெண் காதல் விளையாட்டுக்கு ஆணை  அழைக்கிறாள் . ஆண்  ஓதுங்கி ஒதுங்கிப்போகிறான் . சற்று கூர்ந்து கவனித்தால் இது நன்றாகத் தெரியும். சொல்லப்படும் செய்தி சற்று விரசமாக இருந்தாலும்  கண்ணதாசனின் கற்பனையில் உதித்த பாடலின்  வரிகள்  மிகவும் பொருத்தமாக அமைந்து நம்மை சிந்திக்க வைக்கிறது. கீழே உள்ள பாடலை சொடுக்கவும். நன்றி.
ஜெ எஸ் 




Sunday, February 26, 2017

இசையமைப்பாளர் வேதாவின் காலத்தால் அழியாத பாடல்

இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.ஏனெனில் இதில் இசையும் பாடலும் மிகவும் அருமை. அத்துடன் இதில் கவனிக்க வேண்டியது மற்றொன்று  உண்டு. அதாவது ஜெய்சங்கரும் விஜயலக்ஷ்மியும் மாறி மாறி பல்லவி பாடியதும் கதாநாயகன் சரணம் பாடும்போது  சிறிது நக்கலாக சந்தேகப்படுவதைப்போல் பாட அதற்கு கதாநாயகி மிகவும் அழகாக மிகவும் சாதுர்யமான பொருத்தமான பதிலைத்தருவாள். இதெல்லாம் காலத்தால் அழியாத பாடல்களாகும். 
ஜெ எஸ்  
JS