Monday, February 27, 2017

​தரிசனம் என்ற படத்தில் TMS ம் , L.R.ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய ஓரூ டூயட்.  கண்ணதாசன் எழுதி சூலமங்கலம் ராஜலட்சுமி இசையமைத்தது. இது ஒரு வித்தியாசமான பாடல். ஏனென்றால் பொதுவாக ஒரு ஆண் தான் பெண்ணை காதல்  விளையாட்டுக்கு அழைப்பான். பெண் ஒதுங்கிப்போவாள். ஆனால் இந்த பாடலில் பெண் காதல் விளையாட்டுக்கு ஆணை  அழைக்கிறாள் . ஆண்  ஓதுங்கி ஒதுங்கிப்போகிறான் . சற்று கூர்ந்து கவனித்தால் இது நன்றாகத் தெரியும். சொல்லப்படும் செய்தி சற்று விரசமாக இருந்தாலும்  கண்ணதாசனின் கற்பனையில் உதித்த பாடலின்  வரிகள்  மிகவும் பொருத்தமாக அமைந்து நம்மை சிந்திக்க வைக்கிறது. கீழே உள்ள பாடலை சொடுக்கவும். நன்றி.
ஜெ எஸ் 




Sunday, February 26, 2017

இசையமைப்பாளர் வேதாவின் காலத்தால் அழியாத பாடல்

இது எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.ஏனெனில் இதில் இசையும் பாடலும் மிகவும் அருமை. அத்துடன் இதில் கவனிக்க வேண்டியது மற்றொன்று  உண்டு. அதாவது ஜெய்சங்கரும் விஜயலக்ஷ்மியும் மாறி மாறி பல்லவி பாடியதும் கதாநாயகன் சரணம் பாடும்போது  சிறிது நக்கலாக சந்தேகப்படுவதைப்போல் பாட அதற்கு கதாநாயகி மிகவும் அழகாக மிகவும் சாதுர்யமான பொருத்தமான பதிலைத்தருவாள். இதெல்லாம் காலத்தால் அழியாத பாடல்களாகும். 
ஜெ எஸ்  
JS